Friday, August 17, 2018

கண்களை குளமாக்கிய காட்சி || 8 மாதத்திற்கு பிறகு மகனை சந்தித்த ஆதரவற்ற தாய் கட்டி அனைத்து அழும் காட்ச

TNTJ MEDIA
ஆதரவற்று இருந்த தாயாரை அரவணைத்து மகனிடம் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேயப் பணி !!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வேலூர் மேற்கு மாவட்டம் சார்பாக..

கடந்த எட்டு மாதங்களாக வாணியம்பாடி நியூடவுன் காலேஜ் விளையாட்டு திடலில் ஒரு மூதாட்டி ஆதரவற்று வாழ்வதை கண்ட தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட நிர்வாகிகள் அந்த மூதாட்டியிடம் விசாரித்ததில் அவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்பதும், பெங்களூரில் தனது மகனுடன் இருந்தபோது சற்று மனக்கோளாரினால் வழி தவறி வாணியம்பாடி வந்ததும் தெரியவந்தது.
அவரை பற்றிய விவரங்களை இணையம் வாயிலாக தேடியதில் அவரது மகனின் தொடர்பு கிடைத்து ஜமாஅத்தின் முயற்சியால் 14.7.17.அன்று கல்பனா மன்டல் என்ற அந்த பெண்மணியை அவரது மகன் சுர்ஜித்சிங் மன்டலை வாணியம்பாடிக்கு வரவழைத்து அவரிடம் ஒப்படைத்த நெகிழ்வான சம்பவம் அனைவரது கண்களையும் குளமாக்கியது.

தாயை பிரிந்து சேயும், மகனை பிரிந்த தாயும் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தவர்களாக நன்றியுடம் ஜமாஅத்தாரிடம் விடைபெற்றனர். 

அந்த மூதாட்டிக்கு உதவிவந்த பொதுமக்கள் ஜமாத்தின் இந்த அறிய செயலுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்று கண்ணீரோடு இந்த மனிதநேய செயலை பாராட்டிச்சென்றனர்.

இதற்கான இனைய வழி தேடலை மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் அவர்கள் பெரு முயற்சி மேற்கொன்டதற்கு இறைவன் அருள் புரிவானாக.

"பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்"


No comments :

No comments :

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி